Feb 2, 2026
Thisaigal NewsYouTube
காங்கோ சுரங்க நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 227 ஆக உயர்வு
உலகச் செய்திகள்

காங்கோ சுரங்க நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 227 ஆக உயர்வு

Share:

கின்ஷாசா, பிப்ரவரி.02-

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ருபாயா என்ற இடம் உள்ளது. இங்கு கோல்டான் என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது. அங்கு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உட்பட 200 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலம் என்பதால் அங்குள்ள மண் மிகவும் பலவீனமாக இருந்ததே இந்த நிலச்சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Related News

சர்ச்சைக்குரிய அமெரிக்க நிதியாளர் Jeffrey Epstein உடன் எந்த வித தொடர்பும் இல்லை: சமூக ஊடகங்களில் பரவிய மின்னஞ்சல் குறித்து அன்வார் விளக்கம்

சர்ச்சைக்குரிய அமெரிக்க நிதியாளர் Jeffrey Epstein உடன் எந்த வித தொடர்பும் இல்லை: சமூக ஊடகங்களில் பரவிய மின்னஞ்சல் குறித்து அன்வார் விளக்கம்

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியா - மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடியின் வருகையும் இரு நாட்டுப் பிணைப்பும்

இந்தியா - மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடியின் வருகையும் இரு நாட்டுப் பிணைப்பும்

சிட்னியில் மலேசியரின் கைப்பேசியில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டறியப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார்

சிட்னியில் மலேசியரின் கைப்பேசியில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டறியப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார்

கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

பாராமதி விமான விபத்து : மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் பலி

பாராமதி விமான விபத்து : மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் பலி