Feb 28, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கில் பற்றியது போர் நெருப்பு! ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: அதிரும் அரபு தேசங்கள்
உலகச் செய்திகள்

மத்திய கிழக்கில் பற்றியது போர் நெருப்பு! ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: அதிரும் அரபு தேசங்கள்

Share:

வாஷிங்டன், பிப்ரவரி.28-

மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவி வந்த பதற்றம் தற்போது உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரான் நாட்டின் மீது தரை, கடல் மற்றும் வான் வழியாகப் பிரம்மாண்டமான கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

ஈரானைச் சுற்றி வளைத்துள்ள இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் அமெரிக்கப் படைகள், ஈரானின் ராணுவத் தளங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அணுசக்தி ஆய்வு மையங்கள் என 30-க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்படுகின்றன. அதே வேளையில், அதிநவீன போர் விமானங்கள் மூலம் வான்வழியாகவும் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானும் தனது வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர்க்களமாக மாறியுள்ளது.

போர் காரணமாக ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளன. இதனால் பன்னாட்டு விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அச்சுறுத்தும் ஏவுகணைத் தளங்களை அழிப்பதும், அதன் கடற்படையை நிர்மூலமாக்குவதும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதுமே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

Related News