அமெரிக்கக் குடிமகன் ஒருவர் உளவு வேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அண்டை நாடான மியான்மர் தொடர்பான கொள்கை ஆய்வகத்தில் அரசியல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் மின் ஜின் என்ற நபர் மீது இந்த உளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் மீது குற்றவியல் கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர் மியான்மர் உத்தி மற்றும் கொள்கை கழகத்தின் நிறுவனர் ஆவார். சீனாவுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








