ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை (ஏப்ரல் 2) காலை பலத்த ஏற்றம் கண்டது. ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானைக் 'கற்காலத்திற்கே' தள்ளப்போவதாக அவர் மிரட்டல் விடுத்தார்.
இதன் எதிரொலியாக, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 4.6 விழுக்காடு அதிகரித்து பீப்பாய்க்கு 105.81 டாலரைத் தொட்டது. அமெரிக்க எண்ணெய்யும் 3.8 விழுக்காடு உயர்ந்து 103.89 டாலராக உள்ளது. போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை தற்போது வழக்கத்தை விட 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.








