Jun 17, 2026
Thisaigal NewsYouTube
120 கி.மீ. வேகம் கரையைக் கடந்த டானா புயல்: பலத்த காற்றுடன் கொட்டிய மழை
உலகச் செய்திகள்

120 கி.மீ. வேகம் கரையைக் கடந்த டானா புயல்: பலத்த காற்றுடன் கொட்டிய மழை

Share:

டானா புயல் கரையை கடந்த நிலையில் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது

வங்கக் கடலில் உருவான டானா புயல் இன்று அதிகாலை வடக்கு ஒடிசாவில் உள்ள பிதர்கனிகா மற்றும் டமாரா இடையே தீவிர புயலாக கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 23ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த டானா புயல், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் 23ம் தேதி இரவே தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

புயல் ஒடிசா- மேற்குவங்க கடல் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, டானா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது.
புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. நேற்று இரவில் இருந்து அதிகாலை வரை 5 மணிநேரத்திற்கு மேலாக டானா புயல் கரையைக் கடந்தது.

மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன. தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகரும் புயல் சாகர் தீவில் இருந்து 150 கி.மீ. தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் வலுவிழக்க கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டானா புயல் கரையைக் கடந்த நிலையில் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வன்சபா, பத்ரக், தமாரா உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. புர்பா மிதினாபூரில் உள்ள திகா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை