உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பிறகு தங்களுக்கு எதிராக எழுந்த கடுமையான விமர்சனங்கள் மற்றும் விரோதப் போக்குகளைத் தொடர்ந்து, அர்ஜென்டினா நாட்டிற்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யவோ அல்லது வெளியேற்றவோ வழிவகை செய்யும் அவசரச் சட்டத்தில் அதிபர் சவியர் மிலெய் கையெழுத்திட்டுள்ளார்.
அர்ஜென்டினா மக்கள் மீது வன்முறை, பாகுபாடு அல்லது வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்படும் வெளிநாட்டினரின் நுழைவுரிமையை ரத்து செய்யவும், அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றவும் இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு முழு அதிகாரமளிக்கிறது. மேலும், நாட்டின் தேசிய சின்னங்களை அவமதிப்பவர்கள் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் புலம்பெயர் மக்களை அரவணைத்து வந்த அர்ஜென்டினா நாட்டின் கொள்கைக்கு இது ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. எனினும், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தேசியப் பெருமையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.








