இந்தோனேசியாவில் நீடித்து வரும் காட்டுத்தீயை அணைப்பதற்கு மலேசியா வழங்கியுள்ள உதவியை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வரவேற்றுள்ளார்.
மலேசியாவின் உதவியில் ஒரு போம்பார்டியர் CL-415MP தீயணைப்பு விமானம், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 52 அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய குழுவும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த உதவி சலுகையை துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி, இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ராகாபுமிங் ராகாவிடம் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
போகோர், ஹம்பலாங்கில் உள்ள அதிபரின் இல்லத்தில் Zahid-ஐ சந்தித்த பின்னர் பேசிய பிரபோவோ, காட்டுத்தீ இந்தோனேசியாவில் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் அண்டை நாடுகளையும் பாதிப்பதால் மலேசியா உதவ முன்வந்துள்ளதாகக் கூறினார்.
குறிப்பாக கலிமந்தானில் நீடித்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் உதவ முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.








