Sep 19, 2026
Thisaigal NewsYouTube
தேர்வில் சேட்ஜிபிடி பயன்படுத்திய மாணவர் மரணம்; ஐஐடி பாம்பேவில் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டம்
உலகச் செய்திகள்

தேர்வில் சேட்ஜிபிடி பயன்படுத்திய மாணவர் மரணம்; ஐஐடி பாம்பேவில் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

Share:

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி பாம்பேயில், தேர்வின்போது கைப்பேசி மூலம் சேட்ஜிபிடியைப் பயன்படுத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 19 வயது மாணவர் பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவரான அவர், தேர்வின்போது வினாத்தாளை சேட்ஜிபிடியில் பதிவேற்றி விடைகளைப் பெற முயன்றதாக ஐஐடி பாம்பே தெரிவித்துள்ளது. ஆனால், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஆசிரியர்களும் துறைத் தலைவரும் அவருக்கு ஆலோசனை வழங்கி, இந்தச் சம்பவம் அவரது கல்வியைப் பாதிக்காது என்று உறுதியளித்ததாகவும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

பின்னர் விடுதிக்குத் திரும்பிய மாணவர், அதே மாலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்துக்கான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், நடைபெற்று வந்த இடைக்காலத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Related News

இந்தோனேசிய காட்டுத்தீ; மலேசியாவின் விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உதவியை வரவேற்றார் பிரபோவோ

இந்தோனேசிய காட்டுத்தீ; மலேசியாவின் விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உதவியை வரவேற்றார் பிரபோவோ

100 அமெரிக்க டாலர் பரிசீலனை: அன்வாருக்கு மால்டிவ்ஸ் அதிபர் நன்றி

100 அமெரிக்க டாலர் பரிசீலனை: அன்வாருக்கு மால்டிவ்ஸ் அதிபர் நன்றி

இந்தோனேசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த விமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்க மலேசியா முன்வந்தது

இந்தோனேசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த விமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்க மலேசியா முன்வந்தது

மலேசியா - இந்தோனேசியா ஒத்துழைப்பை வலுப்படுத்த ஸாஹிட் ஹாமிடி ஜகார்த்தா பயணம்

மலேசியா - இந்தோனேசியா ஒத்துழைப்பை வலுப்படுத்த ஸாஹிட் ஹாமிடி ஜகார்த்தா பயணம்

மாலத்தீவின் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 'மென் கடன்' கோரிக்கைக்கு மலேசியா சம்மதம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு

மாலத்தீவின் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 'மென் கடன்' கோரிக்கைக்கு மலேசியா சம்மதம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு

மாலத்தீவு சென்ற பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு அரசு மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு

மாலத்தீவு சென்ற பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு அரசு மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு