மெக்சிகோவில் 'ராபின் ஹுட்' என அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மேயர் கார்லோஸ் மன்சோ வழக்கில், அதன் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளியை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மிச்சோகன் மாநிலத்தின் உரூவாபான் நகரின் மேயராக இருந்த கார்லோஸ் மன்சோ, கடந்த நவம்பர் மாதம் பாரம்பரிய விழாவின் போது குடும்பத்தினருடன் நின்றுகொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையாகச் செயல்பட்டு வந்த அவரது கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மாதக்கணக்கில் நடத்தப்பட்ட தீவிர உளவுத்துறை நடவடிக்கையின் மூலம், சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புடைய இந்தச் சதித்திட்டத்தின் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இக்கொலை வழக்கில் இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.








