ஹெஸ்புல்லா அமைப்பின் சுரங்கங்களை அழிக்கும் நடவடிக்கையாக, லெபனானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பியூஃபோர்ட் கோட்டைக்கு அருகில் சுமார் 700 டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் சக்திவாய்ந்த தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளது.
லெபனானில் உள்ள யுனெஸ்கோவின் ஆபத்திலுள்ள உலக பாரம்பரியப் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இந்தக் கோட்டைப் பகுதியில், நள்ளிரவில் இந்த பாரிய குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹெஸ்புல்லா மீறியதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் கூட்டாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.








