மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் பெட்ரோல், டீசல் விலைகள் உலகளவில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், ஒபெக் பிளஸ் நாடுகள் எடுத்துள்ள இந்த முடிவு ஒரு 'அடையாளப்பூர்வமான' நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், நீரிணை திறக்கப்படும் வரை எவ்வளவுதான் உற்பத்தியை அதிகரித்தாலும் அதை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வது சாத்தியமில்லை.
"நீரிணை திறக்கப்பட்டவுடன் சந்தைக்குத் தேவையான எண்ணெய்யை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதே இந்த அறிவிப்பின் செய்தி" எனச் சவுதி அரேபிய எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை மே மாத நடுப்பகுதி வரை இந்தப் போக்குவரத்துத் தடை நீடித்தால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 150 டாலரைத் தாண்டும் என நிதி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.








