அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சித் தளத்திலிருந்து ஏப்ரல் 2-ஆம் தேதி புறப்பட்ட ஆர்டெமிஸ் 2 விண்கலம், தற்போது வெற்றிகரமாக நிலவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் இந்தத் திட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விண்வெளி வீரர்கள் தற்போது விண்கலத்தின் கருவிகளைப் பரிசோதித்து வருகின்றனர். பூமியிலிருந்து விலகிச் செல்லச் செல்ல, பூமி மெதுவாகச் சுருங்குவதைப் போலக் காட்சியளிப்பதாக வீரர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். ஹூஸ்டன் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர் தொடர்பில் இருக்கும் இவர்கள், விண்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








