கராச்சி, பிப்ரவரி.19-
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் ஒரு குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்தது.
எரிவாயு கசிவினால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கராச்சி பழைய பஜார் பகுதியில் ரமலான் முதல் நாள் நோன்பின் போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது.








