தமிழகம் முழுவதும் இன்று 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் காலை 11 மணி நிலவரப்படி, தமிழகத்தில் சுமார் 37.56 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








