புது தில்லியில் உள்ள சிபிஎஸ்இ வாரியத்தின் ஆன்லைன் விடைத்தாள் மதிப்பீட்டுத் தளத்தில், 12ஆம் வகுப்பு இயற்பியல் விடைத்தாள் நகலில் தனது கையெழுத்தே இல்லை என வேதாந்த் ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர் ஆதாரங்களுடன் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
இணையதளத்தில் தனது பதிவு எண்ணின் கீழ் முற்றிலும் வேறொருவரின் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் தனது மதிப்பெண்களும், உயர்கல்வி வாய்ப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.








