Sep 13, 2026
Thisaigal NewsYouTube
இலங்கையில் 320 மில்லியன் டாலர் மதிப்பிலான மெகா நிவாரணத் திட்டம்: விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நேரடி உதவி!
உலகச் செய்திகள்

இலங்கையில் 320 மில்லியன் டாலர் மதிப்பிலான மெகா நிவாரணத் திட்டம்: விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நேரடி உதவி!

Share:

கொழும்பு, ஏப்ரல் 8: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இலங்கை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நிவாரணத் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. சுமார் 320 மில்லியன் டாலர் 10,000 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான இந்த நிவாரணப் பொதியை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நேற்று ஏப்ரல் 7 நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 25 சதவீத மக்களுக்கு எதிர்வரும் சித்திரை புத்தாண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தைக் கருத்தில் கொண்டு, தலா 25 டாலர் சுமார் 7,500 ரூபாய் கூடுதல் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மேலும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பண உதவி வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, சிறிய படகுகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கு மாதம் 300 டாலர் வரையிலும், பெரிய படகுகளுக்கு 483 டாலர் வரையிலும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படும்.

விவசாயத் துறையைப் பொறுத்தவரை, யூரியா உரத்தின் விலையில் 30 சதவீதத்தை அரசாங்கமே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்திலும் மானியம் வழங்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலமே இந்த நிவாரணத் தொகை ஒதுக்கப்படுவதால், பணவீக்கம் அதிகரிக்காது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ரஷ்யா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை