Feb 3, 2026
Thisaigal NewsYouTube
ஏர் ஏசியா விமானத்தில் அநாகரீகச் செயல்: பேங்காக் விமான நிலையத்தில் அதிரடி கைது
உலகச் செய்திகள்

ஏர் ஏசியா விமானத்தில் அநாகரீகச் செயல்: பேங்காக் விமான நிலையத்தில் அதிரடி கைது

Share:

பேங்காக், பிப்ரவரி.03-

வியட்நாமிலிருந்து பேங்காக் சென்ற ஏர் ஏசியா விமானத்தில், கடந்த ஜனவரி 29-ம் தேதி போதையில் இருந்த பயணி ஒருவர் உள்ளாடையுடன் நின்று ரகளையில் ஈடுபட்டு சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார். விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களை மீறிய அந்த நபர், விமானம் தரையிறங்கியதும் படிக்கட்டில் இருந்து குதித்து தப்பியோட முயன்று கீழே விழுந்து காயமடைந்தார்.

தப்பியோட முயன்ற அவரை விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி, விமானப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் போது, அந்த நபர் ரஷ்ய மொழியில் கூச்சலிட்டபடி விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகவும், தான் குதிக்கப் போவதாகப் மிரட்டியதாகவும் சக பயணிகள் தெரிவித்தனர்.

இதனால் விமானத்திற்குள் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து, விமானி அவசர கால நிலையை அறிவித்து பேங்காக்கின் டான் மியூயெங் (Don Mueang) விமான நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் விமானத்தைத் தரையிறக்கினார். தற்போது அந்தப் பயணியின் மீது விமானப் பணியாளர்களின் உத்தரவுகளை மீறியது மற்றும் விமானப் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவித்தது போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் தாய்லாந்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related News

லண்டனிலிருந்து புறப்பட்டு நடுவானில் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

லண்டனிலிருந்து புறப்பட்டு நடுவானில் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

காங்கோ சுரங்க நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 227 ஆக உயர்வு

காங்கோ சுரங்க நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 227 ஆக உயர்வு

சர்ச்சைக்குரிய அமெரிக்க நிதியாளர் Jeffrey Epstein உடன் எந்த வித தொடர்பும் இல்லை: சமூக ஊடகங்களில் பரவிய மின்னஞ்சல் குறித்து அன்வார் விளக்கம்

சர்ச்சைக்குரிய அமெரிக்க நிதியாளர் Jeffrey Epstein உடன் எந்த வித தொடர்பும் இல்லை: சமூக ஊடகங்களில் பரவிய மின்னஞ்சல் குறித்து அன்வார் விளக்கம்

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியா - மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடியின் வருகையும் இரு நாட்டுப் பிணைப்பும்

இந்தியா - மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடியின் வருகையும் இரு நாட்டுப் பிணைப்பும்

சிட்னியில் மலேசியரின் கைப்பேசியில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டறியப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார்

சிட்னியில் மலேசியரின் கைப்பேசியில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டறியப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார்