ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஈரான் நாட்டு எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க இராணுவம் தாக்கியதைத் தொடர்ந்து இந்தத் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஈரான் கப்பலின் சுக்கானை தாக்கிச் சேதப்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரானிய கடற்படை மூன்று அமெரிக்க அழிப்பிக் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் சேதமடைந்த அமெரிக்கக் கப்பல்கள் அந்தப் பகுதியிலிருந்து பின்வாங்க நேரிட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து உடனடி அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related News

குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ராட்சத கரடி! அதிரடியாக மூடப்பட்ட 94 பள்ளிகள்

பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 32 பேர் பலி, மிண்டானாவோவில் பேரழிவு!

குழந்தைக் காவல் உரிமைப் போராட்டம்: துபாய் அரச குடும்பத்தின் முன்னாள் மருமகள் பிணையில் விடுதலை

பிரதமர் அன்வார் ஜப்பானுக்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார்

கன்றுக்குட்டியுடன் நடனமாடிய நபர்


