காபுல், பிப்ரவரி.22-
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். பெஹ்சுத் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் ஏழு மறைவிடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை குறி வைத்ததாகக் கூறுகிறது. கானா கெலோ மற்றும் கார்டா சாமியா மாவட்டங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளது. மேலும், இந்த வான்வழித் தாக்குதல் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளையும் குறி வைத்தது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாகவும் தலிபான்கள் சபதம் செய்துள்ளனர்.








