உரிமையாளரின் மகன் தனது மூத்த சகோதரர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, தாய் தன் மகனுக்கு எதிராக தொடர்ந்திருந்த 'நன்றியற்ற பிள்ளை' என்ற வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.
தாய்லாந்தின் புகழ்பெற்ற 'சிங்கா' பீர் பேரரசை நிறுவிய பில்லியனர் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை உறுப்பினரான ஜீரானுச் பிரோம்பக்டி தனது நான்காம் தலைமுறை மகனான சிரானுத் "ப்சி" ஸ்காட் என்பவருக்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக பாங்காக் சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு தொடரப்பட்டது.
தாய்லாந்து சட்டத்தின்படி, பிள்ளைகள் நன்றியற்றவர்களாகவோ, பெற்றோரை உடல்ரீதியாகத் தாக்குபவர்களாகவோ, வயதான காலத்தில் கைவிடுபவர்களாகவோ அல்லது குடும்பத்தின் புகழுக்குக் கடுமையான கலங்கத்தை ஏற்படுத்துபவர்களாகவோ இருந்தால், அவர்களுக்கு வழங்கிய பரிசுகள் அல்லது சொத்துக்களைப் பெற்றோர்கள் திரும்பப் பெற இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. எனினும், மூத்த சகோதரர் மீதான பாலியல் வன்கொடுமைப் புகார்களைத் தொடர்ந்து இந்த சிவில் வழக்கு தற்போது அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.








