அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில், ஸ்பெயின் நாடு நேட்டோவில் ஒரு மோசமான பங்காளியாகச் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். ஸ்பெயின் ஒரு வீணான நாடு என்றும், இனிமேல் அந்த நாட்டுடன் எந்தவொரு வர்த்தகத்தையும் அமெரிக்கா செய்ய விரும்பாது என்றும் குறிப்பிட்ட அவர், வர்த்தகத்தைத் துண்டிக்குமாறு அமெரிக்கப் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட்டிடம் வலியுறுத்தினார்.
ஈரான் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு மற்றும் டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து பகுதியை அமெரிக்காவிற்கு வழங்குவதில் நேட்டோ காட்டிய தயக்கம் போன்றவற்றால் தான் நேட்டோ அமைப்பின் மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது என்றும், உலகப் பாதுகாப்பிற்கு அது தேவை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். எனினும், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க அமெரிக்கா நேட்டோவிற்காக விகிதாச்சாரத்திற்கு அதிகமாகப் பணம் செலவழிப்பதாகவும், தாங்கள் அநீதியான முறையில் நடத்தப்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.








