அன்காரா, ஜனவரி.07-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் துருக்கிக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தின் போது, அந்நாட்டின் மிக உயரிய விருதான Order of the Republic விருதை இன்று பெற்றார்.
துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan, அங்காராவில் உள்ள அதிபர் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புச் சடங்கின் போது இந்த விருதை பிரதமர் அன்வாருக்கு வழங்கினார்.
இது வெளிநாட்டுத் தலைவர்களுக்கு துருக்கி வழங்கிய மிக உயரிய கௌரவமாகும். மலேசியா மற்றும் துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.








