Apr 17, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 
உலகச் செய்திகள்

இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

Share:

குஜராத், பிப்ரவ்ரி 25 -

குஜராத்தின் துவாரகாவில் இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவை இணைக்கும் 'சுதர்ஷன் சேது' ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

2.3 கிமீ நீளமுள்ள அந்த பாலத்திற்கு 2017 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இது பழைய மற்றும் புதிய துவாரகாவை இணைக்கும் என்று பிரதமர் அப்போது கூறினார்.நான்கு வழிச்சாலை 27.20 மீட்டர் அகலமுள்ள பாலத்தில் ஒவ்வொரு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன," என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை மற்றும் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் அதில் உள்ளன.'சிக்னேச்சர் பாலம்' என்று அழைக்கப்பட்ட இந்த பாலம், 'சுதர்சன் சேது' அல்லது சுதர்சன் பாலம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.

பேய்ட் துவாரகா என்பது ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒரு தீவு ஆகும்.இது துவாரகா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தொலைவில் உள்ளது, அங்கு புகழ்பெற்ற கிருஷ்ணர் துவாரகாதீஷ் கோவிலும் அமைந்துள்ளது.

இன்று பாலத்தை திறப்பதற்கு முன் துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.குஜராத்தின் முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை(எய்ம்ஸ்) பிரதமர் இன்று மதியம் ராஜ்கோட்டில் திறந்து வைக்க இருக்கிறார்.ராஜ்கோட் எய்ம்ஸ் தவிர, ஆந்திரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் இன்று பிரதமர் திறந்து வைக்கிறார்.

Related News

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!