Apr 23, 2026
Thisaigal NewsYouTube
ஆங் சான் சூகி விவகாரத்தில் "நல்ல முடிவு": மியான்மர் ராணுவத் தலைவர் சூசகம்!
உலகச் செய்திகள்

ஆங் சான் சூகி விவகாரத்தில் "நல்ல முடிவு": மியான்மர் ராணுவத் தலைவர் சூசகம்!

Share:

மியான்மரின் மூத்த தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி குறித்து மியான்மர் ராணுவ அரசாங்கம் "நல்ல விஷயங்களை"ப் பரிசீலித்து வருவதாகத் தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கேவ் தெரிவித்துள்ளார்.

மியான்மரின் புதிய சிவில் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மின் ஆங் ஹ்லைங்கை சந்தித்த பிறகு அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 80 வயதான ஆங் சான் சூகி தற்போது சிறையில் உள்ள நிலையில், அவர் நன்கு கவனிக்கப்படுவதாகவும், அவர் தொடர்பாகச் சில நேர்மறையான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மியான்மர் தரப்பு கூறியுள்ளது. இருப்பினும், அது குறித்த கூடுதல் விபரங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை. இது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கலாம் என்று தாய்லாந்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் மியான்மரின் புத்தாண்டு பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக, சூகியின் நெருங்கிய உதவியாளர் வின் மியின்ட் விடுவிக்கப்பட்டார். அதேபோல் சூகியின் 27 ஆண்டுகாலச் சிறைத்தண்டனையிலும் சிறிய அளவில் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், அந்நாட்டை மீண்டும் ஆசியான் கூட்டமைப்பில் இணைக்கவும் தாய்லாந்து மேற்கொண்டு வரும் ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

Related News