Jun 16, 2026
Thisaigal NewsYouTube
நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலகச் செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Share:

லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. விபத்து நடந்த சமயத்தில் சுரங்கத்திற்குள் 247 தொழிலாளர்கள் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், நச்சுத்தன்மை வாய்ந்த கார்பன் மோனாக்சைடு வாயுவின் அளவு விபரீதமாக அதிகரித்ததால் மீட்புப் பணியில் பெரும் சவால் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சுமார் 870 மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த கோர விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதிபர் ஷி ஜின்பிங், காயமடைந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட சுரங்க நிறுவனத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தொழில்துறை விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

Related News

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்