தாகத்தால் தவித்த இரண்டு பசுக்களுக்கு சிறுமி ஒருவர் கை பம்பை இயக்கி தண்ணீர் கொடுத்து உதவிய நெகிழ்ச்சியான காட்சி கேமராவில் பதிவாகி, பலரின் இதயங்களை வென்றுள்ளது. விலங்குகள் மீது அச்சிறுமிகாட்டிய அக்கறையும், அவற்றிற்கு உதவ வேண்டும் என்ற அவளது உறுதியும் அந்த எளிய கிராமத்து சூழலை ஒரு நெகிழ்ச்சியான தருணமாக மாற்றியுள்ளது. யாரோ ஒருவர் எடுத்த இந்த நெகிழ்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், இதுவே உண்மையான மனிதநேயம் மற்றும் தூய்மையான அன்பு என்று பாராட்டி வருகின்றனர். இவ்வளவு சிறிய வயதில் விலங்குகளிடம் இரக்கம் காட்டிய சிறுமியைப் பலர் பாராட்டி வரும் வேளையில், இதுபோன்ற சிறிய செயல்களே உண்மையான நற்பண்புகளையும் அனுதாபத்தையும் பிரதிபலிக்கின்றன என்று மற்றவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விலங்குகளுக்கு உதவிய இந்த எளிய செயல், கருணை காட்டுவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்கள் முழுவதும் பலரின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.








