கோலாலம்பூர், மார்ச்.22-
இந்தோனேசியாவின் தென்மேற்கு சுமத்ரா பகுதியில் இன்று அதிகாலை 2:08 மணியளவில் ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் சிலேகான் (Cilegon) நகருக்கு தென்மேற்கே 260 கிலோமீட்டர் தொலைவில், 121 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.








