இந்தோனீசியாவின் பல்வேறு நகரங்களுக்கும், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் குழந்தைகளைக் கடத்தியதாக நம்பப்படும் 19 பேர் மீது இந்தோனீசிய அரசு வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.
இந்தக் கும்பலின் தலைவராகச் செயல்பட்ட 70 வயது மாது லியெ சியு லுவான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரிலிருந்து திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஆள்கடத்தல், கூட்டாகச் சேர்ந்து குற்றம் புரிந்தது உள்ளிட்ட மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் இந்தோனீசியா சந்தித்த மிக மோசமான கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தோனீசியக் காவல்துறை, சிங்கப்பூர்க் காவற்படையுடன் இணைந்து மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.








