Jun 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து பூங்காவில் வைரஸ் தொற்று காரணமாக 72 புலிகள் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

தாய்லாந்து பூங்காவில் வைரஸ் தொற்று காரணமாக 72 புலிகள் உயிரிழப்பு

Share:

பேங்காக், பிப்ரவரி.25-

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 72 புலிகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'Canine distemper' எனும் மிக வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்று காரணமாக புலிகள் இறந்துள்ளதை கால்நடை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக நாய்கள் மத்தியில் காணப்படும் இந்த வைரஸானது, புலிகளின் சுவாசப்பை, வயிறு மற்றும் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை தாங்கள் கண்டறிந்த போது நிலைமை கையை மீறிச் சென்றிருந்ததாகவும், பூனைகள் அல்லது நாய்களைப் போல், புலிகளின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினமானது என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 240-க்கும் மேற்பட்ட புலிகளைக் கொண்டிருந்த அந்த பூங்காவானது, இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related News

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்