புதுடில்லி, பிப்ரவரி.06-
இந்தியாவின் தலைநகர் டில்லியில் கடந்த ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரையில், இரண்டு வாரங்களில் மட்டும், மொத்தம் 807 பேர் மாயமாகியுள்ளனர்.
அவர்களில் 509 பெண்கள் மற்றும் 298 ஆண்கள் என்பது டில்லி போலீஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும், அதே காலக்கட்டத்தில், 191 வயது குறைந்தோரும் மாயமாகியுள்ளனர். அவர்களில் 138 சிறுமிகளும், 31 சிறுவர்களும் அடங்குவர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் இன்னும் கண்டறியப்படாமல் அவ்வழக்கானது நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த விவகாரமானது தற்போது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.








