சமூக ஊடகங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்றில், குடிப்போதையில் இருக்கும் இளைஞர் ஒருவர் பணம் தராததால் தனது சொந்தத் தாய் மற்றும் ஒரு கைக்குழந்தை மீது கொடூரமான முறையில் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த கொடூரமான சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் கடுமையான அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வழுவாகி வருகின்றன.
எனினும், வைரலாகி வரும் இக்காணொளியின் உண்மைத்தன்மை குறித்தும், இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்களோ அல்லது நிர்வாக ரீதியிலான சரிபார்ப்புகளோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








