Jul 15, 2026
Thisaigal NewsYouTube
இரு நாள் பயணமாக சனிக்கிழமை மலேசியா வருகிறார் பிரதமர் மோடி
உலகச் செய்திகள்

இரு நாள் பயணமாக சனிக்கிழமை மலேசியா வருகிறார் பிரதமர் மோடி

Share:

புதுடில்லி, பிப்ரவரி.05-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் சனிக்கிழமை முதல் மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்கிறார்.

மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தப் பயணத்தின் போது, இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கியப் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

இது பிரதமர் மோடியின் மூன்றாவது மலேசியப் பயணமாகும். 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 'விரிவான வியூக கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது, 10-ஆவது இந்தியா-மலேசியா CEO மன்றக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர் மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார். பிப்ரவரி 7-ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் MINES அனைத்துலக கண்காட்சி மையத்தில் பிரம்மாண்ட சமூக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவுள்ளது.

Related News

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்