கோலாலம்பூர், மே.18-
இந்தியாவுடனான நெருங்கிய இருதரப்பு உறவை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும். மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என். ரெட்டியின் விடைபெறும் சந்திப்பின் போது, இருதரப்பு நன்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தற்போது 'உயர்தர மூலோபாய கூட்டு' என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தகம், டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு (AI), உணவுப் பாதுகாப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 18.59 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதன் மூலம், தெற்காசியாவில் மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா நீடிக்கிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற கூட்டங்கள் மூலம் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








