மியன்மார், பிப்ரவரி.04-
மியான்மரில் நேற்று இரவில் அடுத்ததடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நேற்று இரவு 9.04 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து 9.21 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வங்காளதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டுள்ளன.








