தோக்கியோ, பிப்ரவரி.08-
ஜப்பானில் நிலவும் கடும் பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் சாலைகளில் பனி உறைதல் போன்ற காரணங்களால், ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தனது அதிகாரப்பூர்வ மலேசியத் தூதரக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜப்பானில் Hokkaido, Tohoku, Kanto, Koshin போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யும் மலேசியப் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.








