மணிலா, மே.24-
பிலிப்பின்ஸின் Angeles City நகரில் ஒன்பது மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கியிருந்தவர்களில் இருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இந்த இடிபாடுகளில் சிக்கியிருந்த 51 வயதுடைய மலேசியர் ஒருவர் உட்பட இதுவரை 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கனரக இயந்திரங்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நகரத் தகவல் அதிகாரி Jay Pelayo தெரிவித்தார். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், அதன் கட்டுமான வரலாற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.








