சீனாவின் ஷான்சி மாநில நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 82 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், நச்சுத்தன்மை வாய்ந்த எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு பெரும்பாலான தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்டபோதிலும், 82 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
மேலும் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், விபத்து குறித்து சீன அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








