Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ! என்னாச்சி?
உலகச் செய்திகள்

பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ! என்னாச்சி?

Share:

ஒட்டாவா: இந்தியா-கனடா இடையேயான மோதல் என்பது உச்சம் தொட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடாவுக்கு எதிராக இந்தியா அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 40 தூதர்களை வெளியேறும்படி இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. கூறியுள்ள நிலையில் கனடா ஷாக்கான நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பணிந்துள்ளார்.

இந்தியா-கனடா இடையேயான தற்போது சுமூகமான உறவு இல்லை. இரு நாடுகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கனடா தான். அதாவது கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவர் கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இவர் மீது இந்தியாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கொலை வழக்கில் இன்னும் கனடா தரப்பு துப்பு துலக்கவில்லை. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை யார் கொலை செய்தார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கனடா திணறி வருகிறது.

Related News