தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றச்சாட்டின் கீழ், சென்னை பெரம்பூர் பகுதியில் இலங்கை குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சிலர் முறைகேடாக வாக்களித்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்குத் திரும்ப முயன்ற பயணிகளின் ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் தீவிரமாகச் சோதித்து வருகின்றனர். இந்தச் சோதனைகளின் மூலம் இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக வாக்களித்த பல வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

உலகச் செய்திகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை பிரஜை சென்னையில் கைது: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
Related News

கடும் வெப்ப அலை காரணமாக மின்சாரப் பயன்பாடு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொடர் தொற்று பாதிப்புகளால் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது: அரண்மனை அறிக்கை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு

பிரதமர் மோடி விவகாரம்: நார்வே ஊடகவியலாளர் திணறல்

சிங்கப்பூரில் 'ஏஐ' திறன்களை மேம்படுத்த ஓப்பன்ஏஐ நிறுவனம் $300 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!


