கொழும்பு, பிப்ரவரி.26-
இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திரத் தங்கும் விடுதிகளை இலக்கு வைத்து தொடர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். அத்தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அத்தாக்குதலில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது சுரேஷ் தூதரக பணியில் இருந்தார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான இவர் 2015ம் ஆண்டுக்கு முன்பு ராஜபக்சே அரசில் மாநில புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








