Apr 14, 2026
Thisaigal NewsYouTube
இலங்கை முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது
உலகச் செய்திகள்

இலங்கை முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

Share:

கொழும்பு, பிப்ரவரி.26-

இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திரத் தங்கும் விடுதிகளை இலக்கு வைத்து தொடர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். அத்தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அத்தாக்குதலில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது சுரேஷ் தூதரக பணியில் இருந்தார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான இவர் 2015ம் ஆண்டுக்கு முன்பு ராஜபக்சே அரசில் மாநில புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பிரபலமாக விரும்பவில்லை, தயவுசெய்து வராதீர்கள்!": வாடிக்கையாளர் வருகையால் திணறிய சீன உணவக உரிமையாளர்!

பிரபலமாக விரும்பவில்லை, தயவுசெய்து வராதீர்கள்!": வாடிக்கையாளர் வருகையால் திணறிய சீன உணவக உரிமையாளர்!

இந்தோனேசியா - அமெரிக்கா இடையே 'முக்கிய' பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

இந்தோனேசியா - அமெரிக்கா இடையே 'முக்கிய' பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

எகிறும் பெட்ரோல் விலை; கொதிக்கும் வெயில்! இதையெல்லாம் மீறி மெக்கோங் நாடுகளில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

எகிறும் பெட்ரோல் விலை; கொதிக்கும் வெயில்! இதையெல்லாம் மீறி மெக்கோங் நாடுகளில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

தென் சீனக் கடல்: சீனப் படகுகள் சயனைடு விஷத்தைப் பயன்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு

தென் சீனக் கடல்: சீனப் படகுகள் சயனைடு விஷத்தைப் பயன்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு

தென்கொரியாவில் பயங்கர எரிவாயு வெடிப்பு: 15 பேர் காயம்!

தென்கொரியாவில் பயங்கர எரிவாயு வெடிப்பு: 15 பேர் காயம்!

இந்திய எல்லைப் பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம்: புதுடெல்லி கடும் எதிர்ப்பு!

இந்திய எல்லைப் பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம்: புதுடெல்லி கடும் எதிர்ப்பு!