தங்கள் வளர்ப்புப் பிராணிகள் தங்களின் சோகமான தருணங்களில் ஆறுதலாக இருப்பதை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் பலரின் இதயங்களைத் தொட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த நெகிழ்ச்சியான காட்சியில், நபர் ஒருவர் பெரும் கவலையுடனும் மனவேதனையுடனும் மாட்டின் அருகில் அழுதுகொண்டு அமர்ந்திருக்கிறார்.
அவரது சோகத்தை உணர்ந்துகொண்ட அந்த மாடு, மெதுவாக அவரை நோக்கி நடந்து வந்து தனது தலையையும் உடலையும் சாய்த்து அவரை மென்மையாகக் கட்டியணைத்து ஆறுதல் கூறுகிறது. பார்ப்பவர் நெஞ்சை உருக வைக்கும் இந்த அபூர்வமான காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள அழகான பாசப் பிணைப்பைப் பாராட்டி வரும் இணையப் பயனர்கள், விலங்குகளாலும் மனிதர்களின் உணர்ச்சிகள், அன்பு மற்றும் வலியைத் தங்களுக்குரிய வழியில் புரிந்துகொள்ள முடியும் என்பதை இந்த வீடியோ நிரூபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.








