இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞரின் காதலை மாணவி ஒருவர் நிராகரித்ததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்ற அந்த இளைஞர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதை அறிந்த பின்னரே மாணவி காதலை மறுத்து இருப்பது தெரியவந்துள்ளது.
தனது நண்பர்கள் சிலருடன் இருசக்கர வாகனங்களில் மாணவியின் வீட்டிற்கு வந்துள்ள அவர்கள் திடீரென வீட்டின் முன் நுழைவாயிலில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீஸ் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் இத்தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








