ரியாத், மார்ச்.22-
சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே மூன்று ballistic ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை இன்று அறிவித்துள்ளது.
மூன்று ஏவுகணைகளில் ஒன்று இடைமறிக்கப்பட்டது. மற்ற இரண்டு ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சவுதி உள்நாட்டுப் பாதுகாப்புப் படை இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.
பின்னர், அபாயம் இல்லையென உறுதிச் செய்யப்பட்டதையடுத்து ஏழு நிமிடங்களில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
மேலும், நள்ளிரவு முதல் ஐந்து ட்ரோன்களும் இடைமறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களின் ஒரு பகுதியாக இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.








