Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ராமேஸ்வரம் | மனைவியை கொன்ற கணவன்.. ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த செயல்!
உலகச் செய்திகள்

ராமேஸ்வரம் | மனைவியை கொன்ற கணவன்.. ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த செயல்!

Share:

அக்டோபர் 08-

ராமேஸ்வரத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்தவரை, காவல்துறையினர் முன்பே கிராம மக்கள் தாக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது

ராமேஸ்வரத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்தவரை, காவல்துறையினர் முன்பே கிராம மக்கள் தாக்கினர்.

ராமேஸ்வரம் அடுத்த ஏரகாடு பகுதியில் காவல்துறையினர், தனலட்சுமி என்பவர் வீட்டிற்கு அவரது கணவர் தர்மராஜூடன் வந்திருந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த வீட்டினை சுற்றி நின்றனர். வீட்டின் அருகே குழி தோண்டிய போது ஒரு உடல் தென்பட்டது.

அப்போது தனலட்சுமியின் உறவினர்களின் அழு குரல் அதிகரித்தது. அப்போதுதான் கிராம மக்களுக்கு தெரிந்தது தனலட்சுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது. உடனடியாக தர்மராஜை சூழ்ந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், சரமாரியாக தாக்க தொடங்கினர்

அவர்களிடம் இருந்து தர்மராஜை காவல்துறையினரும் மீட்டனர். தனலட்சுமியை காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விவாகரத்து கோரி பிரிந்து வாழ்ந்த தனலட்சுமியிடம், தர்மராஜ் தகராறில் ஈடுபட்டதும், அப்போது சுத்தியலால் மனைவியை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

தர்மராஜை கைது செய்த காவல்துறையினர், தனலட்சுமியின் உடலை புதைத்த இடத்தை காட்டுவதற்கு அழைத்து வந்த போதுதான் கிராம மக்கள் தாக்கியுள்ளனர். தர்மராஜ் - தனலட்சுமிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இவரும் தாய், தந்தை இன்றி தனித்து விடப்பட்டிருப்பது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு