Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ஒசாமா பின்லேடன் மகன் | நாட்டைவிட்டு வெளியேற பிரான்ஸ் அரசு உத்தரவு!
உலகச் செய்திகள்

ஒசாமா பின்லேடன் மகன் | நாட்டைவிட்டு வெளியேற பிரான்ஸ் அரசு உத்தரவு!

Share:

அக்டோபர் 10-

ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக அறியப்பட்ட ஒசாமா பின்லேடன், கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் கவனம் பெற்றார். இதையடுத்து அன்றுமுதல் அவர், அமெரிக்காவின் மிகப்பெரிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். என்றாலும், அவர் குறித்த இருப்பிடத்தைத் தேடி வந்த அமெரிக்கப் படையினர், இறுதியில் கடந்த 2011, மே 2ஆம் தேதி அவர் பாகிஸ்தானில் தங்கியிருந்தபோது சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், அவருடைய மகன் உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மறைந்த ஒசாமா பின்லேடனின் பல மகன்களில் உமர் பின்லேடனும் ஒருவர். சவூதியில் பிறந்த உமர் பின்லேடன், 19 வயதிலேயே தன் தந்தையைவிட்டுப் பிரிந்து ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த நிலையில் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வடக்கு பிரான்ஸில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு