Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ஒசாமா பின்லேடன் மகன் | நாட்டைவிட்டு வெளியேற பிரான்ஸ் அரசு உத்தரவு!
உலகச் செய்திகள்

ஒசாமா பின்லேடன் மகன் | நாட்டைவிட்டு வெளியேற பிரான்ஸ் அரசு உத்தரவு!

Share:

அக்டோபர் 10-

ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக அறியப்பட்ட ஒசாமா பின்லேடன், கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் கவனம் பெற்றார். இதையடுத்து அன்றுமுதல் அவர், அமெரிக்காவின் மிகப்பெரிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். என்றாலும், அவர் குறித்த இருப்பிடத்தைத் தேடி வந்த அமெரிக்கப் படையினர், இறுதியில் கடந்த 2011, மே 2ஆம் தேதி அவர் பாகிஸ்தானில் தங்கியிருந்தபோது சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், அவருடைய மகன் உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மறைந்த ஒசாமா பின்லேடனின் பல மகன்களில் உமர் பின்லேடனும் ஒருவர். சவூதியில் பிறந்த உமர் பின்லேடன், 19 வயதிலேயே தன் தந்தையைவிட்டுப் பிரிந்து ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த நிலையில் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வடக்கு பிரான்ஸில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை