அர்த்தமுள்ள மற்றும் சவாலான வேடங்களைத் தேர்வு செய்வதற்குத் தமிழ் சினிமா மிகச்சரியான களம் என்று நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் பின்னணி எமின்றி நுழைந்ததால் ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டதாகவும், தற்போது நல்ல இயக்குநர்களின் கீழ் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வரவிருக்கும் புதிய திரைப்படங்கள் மற்றும் தனது நடிப்புப் பயணம் குறித்தும் அவர் சென்னை டைம்ஸ் பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.








