பிரியா வாரியர் கண்ணடிக்கும் வீடியோவை பார்த்த புகழ்பெற்ற இந்தி நடிகர் ரிஷிகபூர் பாராட்டி உள்ளார். இதுவே ”பெரிய திருப்தி'' என்று பிரியா வாரியர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் பாடல் காட்சியொன்றில் கண்ணடித்து இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியர் நடிகையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் சிறுவயதில் சினிமா பார்த்துவிட்டு வந்த உடனே கண்ணாடியின் முன்நின்று கொண்டு ஹீரோயின் மாதிரி வசனங்களை சொல்லி பார்த்துக்
கொள்வேன்
ஏதோ தமாஷாக அப்படி செய்கிறேன் என்று என் பெற்றோர் நினைத்தனர். ஆனால் பிளஸ்-2 படிக்கையில் ஆடிஷனுக்கு சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயம் புரிந்தது.
பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு சினிமா துறைக்கு என்னை அனுப்பி வைத்தனர்.