பினாங்கில் நில வரி உயர்வால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட தரப்பினருக்கு நில வரி குறைக்கப்படுவதாக முதலமைச்சர் சௌ கோன் இயாவ் அறிவித்துள்ளார். குறிப்பாக, முறையான திட்டமிடல் அனுமதியின்றி வணிக மற்றும் தொழில் துறைக்கு பயன்படுத்தப்படும் பழைய நில உரிமையாளர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது என்றார் அவர்.
அதன்படி, இத்தகைய நிலங்களுக்கு நகர்ப்புறங்களில் ஒரு சதுர மீட்டருக்கு 70 சென்னும், கிராமப்புறங்களில் 50 சென்னும் புதிய வரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒரு சதுர மீட்டருக்கு 2 ரிங்கிட் 80 சென் முதல் 3 ரிங்கிட் 25 சென் வரை வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வரி குறைப்பு மூலம் சுமார் 800-க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களின் சுமை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தச் சலுகையைப் பெறுபவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 50 விழுக்காடு கூடுதல் தள்ளுபடி பொருந்தாது என்றும் முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.








