Apr 1, 2026
Thisaigal NewsYouTube
2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
தற்போதைய செய்திகள்

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

Share:

2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், சிறந்த முடிவுகளைப் பெற்றுச் சாதனைப் படைத்த மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில், ' ஜசெக தெலுக் இந்தான் சிறந்த மாணவர்களுக்கான விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ஙா கோர் மிங் மற்றும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் ஆகியோர் இணைந்து இந்தச் சிறப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளனர். இளைய தலைமுறையினர் கல்வியில் தொடர்ந்து மென்மேலும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விருதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அல்லது அவரது தாய் / தந்தை / காப்பாளர் கண்டிப்பாக தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளராக இருத்தல் வேண்டும்.

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் குறைந்தது 9A (A+, A அல்லது A-) முடிவுகளைப் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

• மாணவரின் அடையாள அட்டையான மைகாட் நகல்.

• தாய் / தந்தை / காப்பாளர் ஆகியோரின் அடையாள அட்டை நகல்.

• எஸ்.பி.எம். தேர்வு முடிவின் நகல்.

"தகுதியுள்ள மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் திரையில் தோன்றும் 'QR குறியீட்டை' ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம்."

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: வரும் 13 ஆம் தேதியாகும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்