ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உலு சிலாங்கூரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி யின் வகுப்பறை கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் குத்தகையாளர் ஒருவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
35 வயதுடைய எம். சிவநேசன் என்ற அந்த குத்தகையாளர் மூன்று வகுப்பறைகளை கொண்ட கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு, 2 லட்சத்து 85 ஆயிரம் வெள்ளியை பெறுவதற்காக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நம்ப வைத்ததாக ஷா ஆலம், செ ஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சுங்கை பூலோவில் உள்ள ஒரு வங்கியில் சிவநேசன் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் சிவநேசன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








